"எனக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லை" என்றவள், அவன் மறுப்பாக எதோ சொல்ல தொடங்குமுன், அவன் கையை எடுத்து தன் வயிற்றின் மேல் வைத்து, "இங்கே உங்க குழந்தை உட்கார்ந்துகிட்டு என்னை சாப்பிட முடியாம படுத்துது! அதுதான் விஷயம்! " என்றாள். "வது????!!!!"
அந்த ஒற்றை வார்த்தையிலேயே, அவனது மொத்த அதிர்ச்சியையும் வெளியிட்ட ஆதி, சிலையாய் நின்றான். அதிர்ச்சியையும் மீறி, உடலில் ஒரு வித சிலிர்ப்பு ஓடியதை அவனால் உணர முடிந்தது.
'என்னுடைய உயிர், நான் உயிராய் நினைக்கும் என் மனைவியின் வயிற்றில்...’, இந்த எண்ணம் எவ்வளவு சந்தோஷத்தை தர வேண்டும்? ஆனால்... அந்த சந்தோஷத்தை அனுபவிக்கும் கொடுப்பினையை கடவுள் கொடுக்கவில்லையே... என்று நினைத்தவனின் வேதனையை அவன் முகம் காட்டியது.
அவனது அதிர்ச்சி எதிர்பார்த்ததுதான் என்றாலும், அவன் அதிர்ந்து நின்ற நிலையும், முகத்தில் இருந்த வேதனையும், தாங்க முடியாமல் போய் விட, ஆதித்யனின் கையைப்பற்றிய வந்தனா, மென்மையாக, "தயா" என்று அழைத்தாள்.
அவளது தொடுகையை உணர்ந்து, தன் அதிர்ச்சியில் இருந்து கொஞ்சம் வெளியே வந்து, "வது! இது...நம்ம குழந்தை...நீ... உன்னோட உடல் நிலை" என்று தொடர்பில்லாமல் வார்த்தைகளை உதிர்த்தவன், தலையை குலுக்கி கொண்டு, "நீ உண்மையாதான் சொல்றியா வது?" என்று விசாரித்தான்.
அவள், ‘ஆமாம்’ என்று தலை அசைக்க, ஆதி குரலில் வேதனையுடன், "இந்த குழந்தை வேண்டாம் வது! " என்றான். இப்போது அதிர்ந்து போய் நிற்பது அவள் முறையாயிற்று. அவளது அதிர்ந்த தோற்றம் மனதை வருத்த, அவளை அழைத்து போய் சோபாவில் அமர்த்தி, தானும் அருகில் அமர்ந்தான்.
"உன்னோட உடல்நிலை பற்றி பேசவே கூடாதுன்னு நீ சொல்லி இருந்தாய்... ஆனால் இப்போ பேசாமல் இருக்க முடியாது" என்றவன், கொஞ்சம் தயங்கி,"குழந்தையை தாங்குகிற அளவுக்கு உனக்கு சக்தி இருக்குமா? அதுவுமில்லாமல், பத்து மாசம்..." என்றவன், 'அதுவரை நீ உயிரோடு இருப்பாயா?' என்று கேட்க முடியாமல் கலங்கி நிற்க,
அவன் கையை பற்றிய வந்தனா, "இந்த குழந்தை பிறக்கிற வரை எனக்கு எதுவும் ஆகாதுன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு தயா!” என்றாள்.
Release date
Ebook: 10 April 2024
"எனக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லை" என்றவள், அவன் மறுப்பாக எதோ சொல்ல தொடங்குமுன், அவன் கையை எடுத்து தன் வயிற்றின் மேல் வைத்து, "இங்கே உங்க குழந்தை உட்கார்ந்துகிட்டு என்னை சாப்பிட முடியாம படுத்துது! அதுதான் விஷயம்! " என்றாள். "வது????!!!!"
அந்த ஒற்றை வார்த்தையிலேயே, அவனது மொத்த அதிர்ச்சியையும் வெளியிட்ட ஆதி, சிலையாய் நின்றான். அதிர்ச்சியையும் மீறி, உடலில் ஒரு வித சிலிர்ப்பு ஓடியதை அவனால் உணர முடிந்தது.
'என்னுடைய உயிர், நான் உயிராய் நினைக்கும் என் மனைவியின் வயிற்றில்...’, இந்த எண்ணம் எவ்வளவு சந்தோஷத்தை தர வேண்டும்? ஆனால்... அந்த சந்தோஷத்தை அனுபவிக்கும் கொடுப்பினையை கடவுள் கொடுக்கவில்லையே... என்று நினைத்தவனின் வேதனையை அவன் முகம் காட்டியது.
அவனது அதிர்ச்சி எதிர்பார்த்ததுதான் என்றாலும், அவன் அதிர்ந்து நின்ற நிலையும், முகத்தில் இருந்த வேதனையும், தாங்க முடியாமல் போய் விட, ஆதித்யனின் கையைப்பற்றிய வந்தனா, மென்மையாக, "தயா" என்று அழைத்தாள்.
அவளது தொடுகையை உணர்ந்து, தன் அதிர்ச்சியில் இருந்து கொஞ்சம் வெளியே வந்து, "வது! இது...நம்ம குழந்தை...நீ... உன்னோட உடல் நிலை" என்று தொடர்பில்லாமல் வார்த்தைகளை உதிர்த்தவன், தலையை குலுக்கி கொண்டு, "நீ உண்மையாதான் சொல்றியா வது?" என்று விசாரித்தான்.
அவள், ‘ஆமாம்’ என்று தலை அசைக்க, ஆதி குரலில் வேதனையுடன், "இந்த குழந்தை வேண்டாம் வது! " என்றான். இப்போது அதிர்ந்து போய் நிற்பது அவள் முறையாயிற்று. அவளது அதிர்ந்த தோற்றம் மனதை வருத்த, அவளை அழைத்து போய் சோபாவில் அமர்த்தி, தானும் அருகில் அமர்ந்தான்.
"உன்னோட உடல்நிலை பற்றி பேசவே கூடாதுன்னு நீ சொல்லி இருந்தாய்... ஆனால் இப்போ பேசாமல் இருக்க முடியாது" என்றவன், கொஞ்சம் தயங்கி,"குழந்தையை தாங்குகிற அளவுக்கு உனக்கு சக்தி இருக்குமா? அதுவுமில்லாமல், பத்து மாசம்..." என்றவன், 'அதுவரை நீ உயிரோடு இருப்பாயா?' என்று கேட்க முடியாமல் கலங்கி நிற்க,
அவன் கையை பற்றிய வந்தனா, "இந்த குழந்தை பிறக்கிற வரை எனக்கு எதுவும் ஆகாதுன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு தயா!” என்றாள்.
Release date
Ebook: 10 April 2024
Step into an infinite world of stories
Overall rating based on 2 ratings
Download the app to join the conversation and add reviews.
English
India