Step into an infinite world of stories
இந்தியா-பாகிஸ்தான் தேசப்பிரிவினையை அடிப்படையாக வைத்து புனையப்பட்ட உணர்வுப்பூர்வமான நாவல் இது.
கமாண்டோ பயிற்சி முடித்து யாஸ்மின் தாத்தா அப்துல்லா இருக்கும் மதுரை திரும்புகிறாள். ஊரே வரவேற்கிறது. யாஸ்மினுடன் கராச்சி பெண்மணி ஷெகனாஸ் முகநூல் நட்பு கொள்கிறாள். பிளாஷ்பேக். அப்துல்லாவும் வஹாப்பும் சகோதரர்கள். 1947 தேசபிரிவினையின் போது அப்துல்லா இந்தியாவிலேயே தங்கிவிட வஹாப் பாகிஸ்தான் போகிறான். அப்துல்லாவின் பேத்தி யாஸ்மின். வஹாப்பின் பேத்தி ஷெகனான்ஸ். ஷெகனான்ஸ் திருமணமானவள். கணவன் பாகிஸ்தானின் உளவுபிரிவில் பணிபுரிகிறான். அவளின் மகன் அஷ்ரப். இம்ரான் ஷெகனான்ஸ்-யாஸ்மின் முகநூல் நட்பு அறிந்து அவளை விவாகரத்து செய்கிறான். ஷெகனாஸ் மகன் அஷ்ரப்புடன் இந்தியா தப்பி வருகிறாள். வழியில் ஷெகனாஸ் இறக்க அஷ்ரப் இந்திய கரை ஒதுங்குகிறான். அஷ்ரப்பை பாக் உளவாளி என இந்தியா கருதுகிறது. யாஸ்மின் மாபெரும் சட்ட போராட்டங்களை நடத்தி அஷ்ரப்பை மீட்டு எடுக்கிறாள். இறுதியில் தாய்மை வெல்கிறது. தேசங்களை தாண்டி மதங்களை தாண்டி ஒரு கன்னிதாய் ஜெயிக்கிறாள்.
Release date
Ebook: 11 January 2021
English
India