ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
தாயே! என்னை எழுதவைப்பது நீங்கள் தான். நீங்கள் தான் எழுத்தாளர். நான் பேனா மட்டுமே!” "இப்போதாவது புரிந்ததே!" "இன்னொரு விஷயம்தான் புரியவில்லை, தாயே!" “என்ன விஷயம்?” "இந்த நூலில் நான்கு கதைகள். நீங்களே தோழியாக வந்து, துவண்டு போயிருந்த செல்விக்கு வாழ்வு கொடுத்த கதை , நாடாளும் அரசியைக் காதலித்த ஒரு ஏழைப் பண்ணையாளின் கதை, அடியார்க்கு அடியானாகப் பரிமளித்த ஆண்டவனின் கதை, அன்பில் உருகிய ஒரு அரக்கனின் கதை. என்னை ஏன் இந்தக் கதைகளை எழுதவைத்தீர்கள்?” "இதுகூடவா புரியவில்லை ?" "எழுத்தாளரின் மனதில் இருப்பது பேனாவிற்கு எப்படித் தெரியும்?” "சொல்கிறேன், கேள். அன்பென்னும் ஆரம்பப் புள்ளியில் தொடங்கி, அன்பின் வழியே நடந்து அன்பென்னும் இலக்கை அடைவதுதான் ஆன்மிகப் பயணம் என்பதைப் புரியவைக்கத்தான்.'' "அப்படியென்றால் ..." "அன்பே ஆன்மிகம்." அவள் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டாள். இனி அந்த அழகிய எழுத்தாளராயிற்று, நீங்களாயிற்று! இடையில் இந்தப் பேனாவிற்கு என்ன வேலை?
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 19 ธันวาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย