ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
5
ศาสนา&จิตวิญญาณ
அன்பு, ஆண்டவன், ஆன்மீகம், மீனாட்சி, அவள் கருணை - எல்லாம் சரிதான் தாயே! ஆனால் இந்தப் பாழாய்ப் போன காலம் எங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக்கொண்டிருக்கிறதே! காலத்தின் அகோரப் பசிக்கு இரையாவதற்கு முன்னால் உங்களை... உங்கள் அருள்... அன்பு... பயமாக இருக்கிறது, தாயே!” கல் தரையில் வெள்ளி மணிகளை உருட்டிவிட்டதைப் போன்ற சத்தத்துடன் பெரிதாகச் சிரித்தாள் பச்சைப்புடவைக்காரி. கனிந்த அன்பைக் காலத்தால் ஒன்றும் செய்ய முடியாது காலம் என்பது என் படைப்பு; இந்தக் காளியின் காலின் நக அழுக்கு அன்பே நான்; அன்பே நீ என்பதை இன்றே உணர்வாய் நீ அந்த அன்பின் நான்கு வெளிப்பாடுகள் இந்த நூலில். “ஐந்தாவது வெளிப்பாடும் இதில் உண்டு, தெரியுமா?” கேட்டவள் இந்த நூலை என்னை எழுத வைத்த மாகாளி. பதிலையும் அவளே சொன்னாள். “இதைப் படிப்பவர்கள் கண்களில் பொங்கிவரும் கண்ணீர். அது துன்பத்தின் வெளிப்பாடு இல்லை; துன்பங்களை எல்லாம் தவிடுபொடியாக்கும் இந்த சக்தியின் வெளிப்பாடு.” அவள் சொன்னதை உங்களிடம் சொல்லிவிட்டேன். இனி அவள் பாடு; உங்கள் பாடு.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 19 ธันวาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย