Step into an infinite world of stories
ஒரு தாய்க்கு அவள் குழந்தைகள் அனைவருமே முக்கியமானவர்கள்; பாசத்திற்குரியவர்கள். ஓர் எழுத்தாளருக்கும் அவரது படைப்புகளுக்குமிடையே உள்ள உறவும் இப்படிப்பட்டதுதான். என் படைப்புகள் அனைத்துமே எனக்கு முக்கியமானவை. அவற்றில் வரும் ஏதாவது ஒரு கதாபாத்திரம் படிப்பவர்கள் மனதில் சில நிமிடங்களாவது நிலைக்க வேண்டும் என்பது என் ஆசை.
இந்தத் தொகுப்பில் வெளியாகும் ஐந்து குறுநாவல்களில் 'பாலை மண்ணில் புதையுண்ட நீரோடை' என்கிற குறுநாவல் கலைமகள் 'அமரர் ராமரத்னம்’ குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. பின்னர் 'அனுபமா' என்கிற தலைப்பில் இதை நான் நாடக வடிவாக்கிக் கொடுக்க சென்னை தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகியது.
‘உறவுகள் மென்மையானவை’, ‘எத்தனை முகங்கள்’, மற்றும் 'அந்த நதி எங்கே போகிறது' இவை மூன்றும் அமுதசுரபியில் பிரசுரமானவை. 'அந்த நதி' குறுநாவல் போட்டியில் பரிசு வாங்கியது என்கிற கூடுதல் சிறப்பை உடையது.
வணக்கம்.
லக்ஷ்மி ரமணன்
Release date
Ebook: 18 May 2020
English
India