Step into an infinite world of stories
சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும் எத்தனையோ விஷயங்கள் நம்மிடையே இருக்கின்றன. உலகில் உள்ள மக்களின் சிந்தனைகளும் ஒன்றுபோல இருப்பதில்லை என்பதுதான் இந்த உலகத்தின் விந்தை. ஆனால் ஒரு சில விஷயங்கள் மட்டும் இறைவன் மனிதனிடம் இயற்கையாகத் தோற்றுவித்துள்ளான். அதில் ஒன்றுதான் ஆணைப் பெண் ஈர்ப்பதும், பெண்ணை ஆண் ஈர்ப்பதும். இந்தச் சங்கமத்தின் புனிதத்தில்தான் உயிர்ப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன ஆனால் இந்த ஈர்ப்பால்தான் எத்தனை சங்கடங்கள்...
பெண்ணுக்குக் கத்தி மேல் நடப்பது போன்ற சோதனைகள்...
காதலனின் சந்தேகம் என்ற பேய் அன்பின் கட்டிடத்தில் நின்று கூத்தாடும் பொழுது காதலி வெந்து உருகிப்போவது சமுதாயத்தின் சகஜ சாத்தியமாகிறது. காதலனுக்கு ஆகட்டும், கணவனுக்கு ஆகட்டும் “பொஸஸிவ்னெஸ்” இருந்தால்தான் குடும்பம் என்ற கூடு கால வெள்ளத்தின் ஓட்டத்தில் கலகலத்துப் போகாமல் நிற்க முடியும்.
நர்ஸ் மாதவி இங்கே கத்தி மேல் நடக்கிறாள். மூளை கலங்கியவனுக்குச் செய்யும் சேவைகூட காதலனின் கண்களுக்குக் காமாலை மஞ்சளைப் பூசுகிறது. அன்பினால் பலப்பட்டவர்களுக்குச் சந்தேகம்கூட ஊடலாக ஆனபின்பு—வாழ்க்கை சுவை கூடும் என்னும்போது நவரசங்களும் வாழ்வில் இருக்க வேண்டும் அல்லவா? அன்பை யாசித்து நிற்கும் பொழுது அது பெண்ணின் தோல்வி என்றும் பலவீனம் என்றும் சொல்லுவார்கள்.
யாசித்து தன்னை நிரூபித்து வெற்றி கொள்ளும் பெண்ணினம்--ஆண்மையை அடக்கியாள்கிறது என்பதுதான் நிதர்சனமான நிரூபணம்!
நானே எல்லாவற்றையும் சொல்லி விட்டால் எப்படி? நீங்கள் நர்ஸ் மாதவியைப் படிக்க வேண்டாமா!
‘பூக்கள் மென்மையானவை’ படித்து முடித்து என் அன்பு ரசிகர்களே 'நர்ஸ் மாதவியும்’ ஒரு அனிச்சம் மலர்தான் என்பதனைப் படித்துப் பார்த்து உணர்வீர்கள் என்றுதான் உங்கள் கைகளில் சமர்ப்பிக்கிறேன்.
- லட்சுமி ராஜரத்னம்
Release date
Ebook: 18 December 2019
English
India