5
روايات رومانسية
இதில நான்கு முஹுர்த்த தேதிகள் குறிச்சுட்டு வந்திருக்கேன்... உனக்கு என்ன தேதி சரிப்பட்டு வரும் என்று பார்!” என்று தமிழ் ஒரு காகிதத்தை நீட்ட, அதை வாங்காமல், “யாரைக் கேட்டு நீங்க இந்த ஏற்பாடெல்லாம் செய்யறீங்க? நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லலை என்று நினைவிருக்கா இல்லையா?” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு வினவினாள்.
“இல்ல பாரதி... உன் சம்மதம் கிடைச்ச பிறகுதான் நான் இந்த வேலையையே ஆரம்பிச்சேன்!” என்று தமிழ் சாதாரணமாக கூற, அப்போதுதான் அவன் தன்னை ஒருமையில் அழைப்பதை பாரதி உணர்ந்த பாரதிக்கு, இன்றே இதற்கு முடிவு கட்டி விட வேண்டும் என்று தோன்றியது. “நான் எப்போ சார் சம்மதம் சொன்னேன்?” என்று கிண்டலாக வினவினாள்.
“நேற்று முன் தினம், நான் வண்டி வாங்கிட்டு வந்து, என் கல்யாணம் பற்றி சொன்னதும், கேண்டீனில் போய் அழுதாயே... அப்போ!”
தமிழ் சொன்னதும், ஒரு கணம் திடுக்கிட்ட பாரதி, அடுத்த கணமே தன்னை சுதாரித்துக் கொண்டு, “உலகத்தில் எல்லாரும் எப்பவும் உங்களைப் பற்றி மட்டும்தான் நினைச்சுட்டு இருப்பாங்க என்று உங்களுக்கு நினைப்பு போல!” என்றவள் குரலில் எள்ளல் இருந்தது. எதற்கும் அசராமல் தமிழ் புன்னகை விலகாமல் அமர்ந்திருக்க, பாரதியின் மனதில் கோபம் மூண்டது.
“நான் உங்ககிட்ட வந்து கேட்டேனா... எனக்கு வாழ்க்கை கொடுங்க என்று...எதுக்கு சார் இப்படி தொந்தரவு செய்யறீங்க?”
அவள், அவனை அந்நியமாக்கி பேச ஆரம்பிக்க, தமிழின் முகம் லேசாக வாடத் துவங்கியது.
“நான் உனக்கு வாழ்க்கை கொடுக்கணும் என்று நினைக்கலை பாரதி...என் வாழ்க்கையை உன்னோடு பகிர்ந்துக்கணும் என்றுதான் நினைக்கிறேன்!”
“ஆனா...அதுக்கு என்னோட சம்மதம் தேவை இல்லை என்று நினைச்சுட்டீங்க? இல்ல?” என்றவளது குரலில் கோபம் இப்போது வெளிப்படையாகவே தெரிந்தது.
“அப்படி இல்ல...” என்று சொல்ல வந்தவனை கை நீட்டி இடைமறித்தவள், “நல்லா கேட்டுக்கோங்க... எனக்கும் கல்யாண ஆசை இருக்கு... எனக்கு எப்போ தோணுதோ... எனக்கு ஏற்றவரை எப்போ பார்க்கிறேனோ... அப்போ கண்டிப்பா கல்யாணம் செஞ்சுப்பேன்! நீங்க சிரமப் பட வேண்டாம்!” என்று முகத்தில் அடித்ததைப் போலப் பேச, அவள் வேண்டுமென்றே அவனை மறுக்கிறாள் என்று தமிழுக்கு புரிந்தது.
تاريخ الإصدار
كتاب : 10 أبريل 2024
5
روايات رومانسية
இதில நான்கு முஹுர்த்த தேதிகள் குறிச்சுட்டு வந்திருக்கேன்... உனக்கு என்ன தேதி சரிப்பட்டு வரும் என்று பார்!” என்று தமிழ் ஒரு காகிதத்தை நீட்ட, அதை வாங்காமல், “யாரைக் கேட்டு நீங்க இந்த ஏற்பாடெல்லாம் செய்யறீங்க? நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லலை என்று நினைவிருக்கா இல்லையா?” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு வினவினாள்.
“இல்ல பாரதி... உன் சம்மதம் கிடைச்ச பிறகுதான் நான் இந்த வேலையையே ஆரம்பிச்சேன்!” என்று தமிழ் சாதாரணமாக கூற, அப்போதுதான் அவன் தன்னை ஒருமையில் அழைப்பதை பாரதி உணர்ந்த பாரதிக்கு, இன்றே இதற்கு முடிவு கட்டி விட வேண்டும் என்று தோன்றியது. “நான் எப்போ சார் சம்மதம் சொன்னேன்?” என்று கிண்டலாக வினவினாள்.
“நேற்று முன் தினம், நான் வண்டி வாங்கிட்டு வந்து, என் கல்யாணம் பற்றி சொன்னதும், கேண்டீனில் போய் அழுதாயே... அப்போ!”
தமிழ் சொன்னதும், ஒரு கணம் திடுக்கிட்ட பாரதி, அடுத்த கணமே தன்னை சுதாரித்துக் கொண்டு, “உலகத்தில் எல்லாரும் எப்பவும் உங்களைப் பற்றி மட்டும்தான் நினைச்சுட்டு இருப்பாங்க என்று உங்களுக்கு நினைப்பு போல!” என்றவள் குரலில் எள்ளல் இருந்தது. எதற்கும் அசராமல் தமிழ் புன்னகை விலகாமல் அமர்ந்திருக்க, பாரதியின் மனதில் கோபம் மூண்டது.
“நான் உங்ககிட்ட வந்து கேட்டேனா... எனக்கு வாழ்க்கை கொடுங்க என்று...எதுக்கு சார் இப்படி தொந்தரவு செய்யறீங்க?”
அவள், அவனை அந்நியமாக்கி பேச ஆரம்பிக்க, தமிழின் முகம் லேசாக வாடத் துவங்கியது.
“நான் உனக்கு வாழ்க்கை கொடுக்கணும் என்று நினைக்கலை பாரதி...என் வாழ்க்கையை உன்னோடு பகிர்ந்துக்கணும் என்றுதான் நினைக்கிறேன்!”
“ஆனா...அதுக்கு என்னோட சம்மதம் தேவை இல்லை என்று நினைச்சுட்டீங்க? இல்ல?” என்றவளது குரலில் கோபம் இப்போது வெளிப்படையாகவே தெரிந்தது.
“அப்படி இல்ல...” என்று சொல்ல வந்தவனை கை நீட்டி இடைமறித்தவள், “நல்லா கேட்டுக்கோங்க... எனக்கும் கல்யாண ஆசை இருக்கு... எனக்கு எப்போ தோணுதோ... எனக்கு ஏற்றவரை எப்போ பார்க்கிறேனோ... அப்போ கண்டிப்பா கல்யாணம் செஞ்சுப்பேன்! நீங்க சிரமப் பட வேண்டாம்!” என்று முகத்தில் அடித்ததைப் போலப் பேச, அவள் வேண்டுமென்றே அவனை மறுக்கிறாள் என்று தமிழுக்கு புரிந்தது.
تاريخ الإصدار
كتاب : 10 أبريل 2024
خطوة إلى عالم لا حدود له من القصص
التقييم الإجمالي استنادًا إلى تقييمات :reviewالعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة