3.3
أدب الجريمة
“திலகா...!” “என்ன ஷாம்...?” “வர்ற சண்டே கோவளம் போய்ட்டு வரலாமா?” “வர்ற சண்டேவா...?” “முடியாதே...!” “ஏன் முடியாது... அன்னிக்கு லீவுதானே...?” “லீவா...! லீவு என்கிற வார்த்தையே எங்க கம்ப்யூட்டர் லேப்ல கிடையாது. ரொம்பவும் அர்ஜெண்ட்ன்னா ஒருமணி நேரம் பர்மிஷன் போட்டுட்டு வெளியே போய்ட்டு வரலாம்.” “இது உலக மகா அநியாயம்...” “ஷாம்...! நான் இந்த கம்ப்யூட்டர் லேப்பில் வேலைக்கு சேர்ந்த அன்னிக்கே இங்கே இருக்கிற காலண்டர்களை புரட்டிப் பார்த்தேன். சனி, ஞாயிறு நாட்களே கிடையாது... இங்கே வேலை நேரம் ஹவர்ஸ் கணக்குத் தான்...! எனக்கு இங்கே இருபதாயிரம் மணி நேரம் வேலை...” “அப்படீன்னா... நீ வெளியே வரவே முடியாதா?” “வரலாம்... ஆனா உன் கூட சேர்த்து ஜாலியா சுத்த முடியாது...” “அதாவது காதலிக்க முடியாதுன்னு சொல்றே...?” “ஷாம்...! ஜாலியா சுத்தினாத்தான் காதலா...? இப்ப போன்ல பேசிக்கறோமே இது கூட காதல்தான்...!“திலகா...!” “ம்…” “உன்னை 24 மணி நேரமும் பார்த்துக்கிட்டே இருக்கணும் போலிருக்கு” “நான் பாத்ரூம்கூட போக வேண்டாமா?” “ஜோக் அடிக்க இது நேரம் இல்லை திலகா. நீ அந்த கம்ப்யூட்டர் கம்பெனியில் போய் வேலைக்கு சேர்ந்து ரெண்டு நாள்தான் ஆகியிருக்கு. ஆனா 20 வருஷம் ஆன மாதிரி ஒரு ஃபீலிங்...! உன்னைப் பார்க்காமே இருக்க முடியலை.” “ஷாம்...! பேத்தாதே... நான் ஒரு க்ளார்க் உத்தியோகமோ... முன்சீஃப் கோர்ட் குமாஸ்தா உத்தியோகமோ பார்க்க வரலை... மத்திய அரசு சம்பந்தப்பட்ட ஒரு ரெப்யூட்டட் கம்ப்யூட்டர் லேப்பில் எக்ஸிக்யூட்டிவ் ட்ரெய்னியாக, இருபத்தைந்தாயிரம் சம்பளத்தில் வேலை பார்த்துகிட்டு இருக்கேன். 20,000 மணி நேரம் வேலை பார்த்த பிறகுதான் நீயும் நானும் ஜாலியா வெளியே போக முடியும்...!” “ஒழிக...!” “யாரு...” “கம்ப்யூட்டரைக் கண்டுபிடிச்சவன்...!” திலகா சிரித்துக் கொண்டிருக்கும்போதே கம்ப்யூட்டர்க்குப் பக்கத்தில் இருந்த இண்ட்டர்காம் கூப்பிட்டது. “ஷாம்...! எனக்கு என்னோட எம்.டி.கிட்டயிருந்து போன். நான் நாளைக்கு மறுபடியும் உனக்கு போன் பண்றேன்.” “அந்த எம்.டி.யும் ஒழிக...!” திலகா பலமாய் சிரித்து ரிசீவரை வைத்துவிட்டு இண்ட்டர்காம் ரிசீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தாள். மறுமுனையில் எம்.டி. மஹாதேவ் குரல் கேட்டது. “திலகா...“ஸார்...” “அந்த எஸ்.க்யூ சர்க்யூட்டை பார்த்து முடிச்சுட்டியா?” “பார்த்துட்டிருக்கேன் ஸார்!” “அதுல ஒரு சின்ன கரெக்ஷன் பண்ண வேண்டியிருக்கு. பத்து நிமிஷம் என்னோட கேபினுக்கு வந்துட்டு போ. வரும்போது சர்க்யூட் சார்ட்டை கொண்டு வந்துடு...” “எஸ்... ஸார்...!” சொன்ன திலகா கம்ப்யூட்டர் சமாச்சாரங்கள் நிறைந்த அந்த ஏ.ஸி. அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்டாள். சல்வார் கம்மீஸுக்குள் ஒரு சந்தன சிலையாய் தெரிந்த திலகாவுக்கு சற்றே நீள்வட்டமான சதைபிடிப்பு முகம். புருவம் மழித்த இடத்தில் வளையல் துண்டுகளாய் ‘ஐ’ப்ரோ பென்சிலின் உபயத்தில் தீற்றல்கள். சின்ன உதடுகளில் உறுத்தாத லிப்ஸ்டிக் பூச்சு. கழுத்தில் வெள்ளி சங்கிலி. லேசாய் உயர்த்திப் போட்ட கொண்டை. சென்னை நகர்க்குள் அழகிப் போட்டி நடத்தினால் சுலபமாய் மிஸ் சென்னை பட்டத்தை தட்டிக் கொண்டு வந்து விடுவாள். ரொம்ப நாட்களாய் ஆண்களை வெறுத்துக் கொண்டிருந்தவள் கடைசியில் ‘ஷாம்’ என்ற அழகான இளைஞனுக்கு தன் இதயத்தைத் தூக்கிக் கொடுத்தாள். ஷாம்...? முழுப்பெயர் சாம்ராஜ். வயது 25. எம்.பி.ஏ. படித்துவிட்டு ஒரு நல்ல வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவன். பிடிக்காத மூன்று விஷயங்கள். 1. அரசியல். 2. பெரிய திரை. 3. சின்னத்திரை. பிடித்த மூன்று விஷயங்கள். 1. திலகா. 2. திலகா. 3, திலகா. தன்னுடைய கம்ப்யூட்டர் அறையிலிருந்து வெளிப்பட்ட திலகா ப்ளைவுட் தடுப்புகளாலான பல அறைகளைக் கடந்து கடைசியில் இருந்த எம்.டி.யின் அறைக்கதவுக்கு முன்பாய் நின்றாள். கதவை மெல்லத் தட்ட உள்ளேயிருந்து மஹாதேவ் குரல் கொடுத்தார்
© 2024 Pocket Books (كتاب ): 6610000530236
تاريخ الإصدار
كتاب : 8 فبراير 2024
الوسوم
3.3
أدب الجريمة
“திலகா...!” “என்ன ஷாம்...?” “வர்ற சண்டே கோவளம் போய்ட்டு வரலாமா?” “வர்ற சண்டேவா...?” “முடியாதே...!” “ஏன் முடியாது... அன்னிக்கு லீவுதானே...?” “லீவா...! லீவு என்கிற வார்த்தையே எங்க கம்ப்யூட்டர் லேப்ல கிடையாது. ரொம்பவும் அர்ஜெண்ட்ன்னா ஒருமணி நேரம் பர்மிஷன் போட்டுட்டு வெளியே போய்ட்டு வரலாம்.” “இது உலக மகா அநியாயம்...” “ஷாம்...! நான் இந்த கம்ப்யூட்டர் லேப்பில் வேலைக்கு சேர்ந்த அன்னிக்கே இங்கே இருக்கிற காலண்டர்களை புரட்டிப் பார்த்தேன். சனி, ஞாயிறு நாட்களே கிடையாது... இங்கே வேலை நேரம் ஹவர்ஸ் கணக்குத் தான்...! எனக்கு இங்கே இருபதாயிரம் மணி நேரம் வேலை...” “அப்படீன்னா... நீ வெளியே வரவே முடியாதா?” “வரலாம்... ஆனா உன் கூட சேர்த்து ஜாலியா சுத்த முடியாது...” “அதாவது காதலிக்க முடியாதுன்னு சொல்றே...?” “ஷாம்...! ஜாலியா சுத்தினாத்தான் காதலா...? இப்ப போன்ல பேசிக்கறோமே இது கூட காதல்தான்...!“திலகா...!” “ம்…” “உன்னை 24 மணி நேரமும் பார்த்துக்கிட்டே இருக்கணும் போலிருக்கு” “நான் பாத்ரூம்கூட போக வேண்டாமா?” “ஜோக் அடிக்க இது நேரம் இல்லை திலகா. நீ அந்த கம்ப்யூட்டர் கம்பெனியில் போய் வேலைக்கு சேர்ந்து ரெண்டு நாள்தான் ஆகியிருக்கு. ஆனா 20 வருஷம் ஆன மாதிரி ஒரு ஃபீலிங்...! உன்னைப் பார்க்காமே இருக்க முடியலை.” “ஷாம்...! பேத்தாதே... நான் ஒரு க்ளார்க் உத்தியோகமோ... முன்சீஃப் கோர்ட் குமாஸ்தா உத்தியோகமோ பார்க்க வரலை... மத்திய அரசு சம்பந்தப்பட்ட ஒரு ரெப்யூட்டட் கம்ப்யூட்டர் லேப்பில் எக்ஸிக்யூட்டிவ் ட்ரெய்னியாக, இருபத்தைந்தாயிரம் சம்பளத்தில் வேலை பார்த்துகிட்டு இருக்கேன். 20,000 மணி நேரம் வேலை பார்த்த பிறகுதான் நீயும் நானும் ஜாலியா வெளியே போக முடியும்...!” “ஒழிக...!” “யாரு...” “கம்ப்யூட்டரைக் கண்டுபிடிச்சவன்...!” திலகா சிரித்துக் கொண்டிருக்கும்போதே கம்ப்யூட்டர்க்குப் பக்கத்தில் இருந்த இண்ட்டர்காம் கூப்பிட்டது. “ஷாம்...! எனக்கு என்னோட எம்.டி.கிட்டயிருந்து போன். நான் நாளைக்கு மறுபடியும் உனக்கு போன் பண்றேன்.” “அந்த எம்.டி.யும் ஒழிக...!” திலகா பலமாய் சிரித்து ரிசீவரை வைத்துவிட்டு இண்ட்டர்காம் ரிசீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தாள். மறுமுனையில் எம்.டி. மஹாதேவ் குரல் கேட்டது. “திலகா...“ஸார்...” “அந்த எஸ்.க்யூ சர்க்யூட்டை பார்த்து முடிச்சுட்டியா?” “பார்த்துட்டிருக்கேன் ஸார்!” “அதுல ஒரு சின்ன கரெக்ஷன் பண்ண வேண்டியிருக்கு. பத்து நிமிஷம் என்னோட கேபினுக்கு வந்துட்டு போ. வரும்போது சர்க்யூட் சார்ட்டை கொண்டு வந்துடு...” “எஸ்... ஸார்...!” சொன்ன திலகா கம்ப்யூட்டர் சமாச்சாரங்கள் நிறைந்த அந்த ஏ.ஸி. அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்டாள். சல்வார் கம்மீஸுக்குள் ஒரு சந்தன சிலையாய் தெரிந்த திலகாவுக்கு சற்றே நீள்வட்டமான சதைபிடிப்பு முகம். புருவம் மழித்த இடத்தில் வளையல் துண்டுகளாய் ‘ஐ’ப்ரோ பென்சிலின் உபயத்தில் தீற்றல்கள். சின்ன உதடுகளில் உறுத்தாத லிப்ஸ்டிக் பூச்சு. கழுத்தில் வெள்ளி சங்கிலி. லேசாய் உயர்த்திப் போட்ட கொண்டை. சென்னை நகர்க்குள் அழகிப் போட்டி நடத்தினால் சுலபமாய் மிஸ் சென்னை பட்டத்தை தட்டிக் கொண்டு வந்து விடுவாள். ரொம்ப நாட்களாய் ஆண்களை வெறுத்துக் கொண்டிருந்தவள் கடைசியில் ‘ஷாம்’ என்ற அழகான இளைஞனுக்கு தன் இதயத்தைத் தூக்கிக் கொடுத்தாள். ஷாம்...? முழுப்பெயர் சாம்ராஜ். வயது 25. எம்.பி.ஏ. படித்துவிட்டு ஒரு நல்ல வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவன். பிடிக்காத மூன்று விஷயங்கள். 1. அரசியல். 2. பெரிய திரை. 3. சின்னத்திரை. பிடித்த மூன்று விஷயங்கள். 1. திலகா. 2. திலகா. 3, திலகா. தன்னுடைய கம்ப்யூட்டர் அறையிலிருந்து வெளிப்பட்ட திலகா ப்ளைவுட் தடுப்புகளாலான பல அறைகளைக் கடந்து கடைசியில் இருந்த எம்.டி.யின் அறைக்கதவுக்கு முன்பாய் நின்றாள். கதவை மெல்லத் தட்ட உள்ளேயிருந்து மஹாதேவ் குரல் கொடுத்தார்
© 2024 Pocket Books (كتاب ): 6610000530236
تاريخ الإصدار
كتاب : 8 فبراير 2024
الوسوم
خطوة إلى عالم لا حدود له من القصص
التقييم الإجمالي استنادًا إلى تقييمات :reviewالعد
ملهم
يخطف الأنفاس
غني المعلومات
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة