Lyric Poetry & Drama
முனைவர் திருமதி. ஜெயந்தி நாகராஜன் அவர்கள் சிறந்த எழுத்தாளர் கவிஞர் பேச்சாளர் அவர் எழுத்தை ஆளவில்லை.
எழுத்து அவரை ஆள்கிறது என்று கூறலாம். குழந்தைகளுக்காக அழகிய பாடல்கள் நாடகங்கள் வாழ்க்கை வரலாற்று நூல்கள் எனப் பலவற்றை அளித்துள்ளார் குழந்தைகளுக்காக எழுதும்பொழுது குழந்தையாகவே மாறிவிடுகிறார். குழந்தை உள்ளம் படைத்தவர் ஏடு தூக்கி பள்ளியில் இன்று பயிலும் சிறுவரே நாடு காக்கும் தலைவராய் நாளை விளங்கப் போகிறார் என்பது குழந்தைக் கவிஞர் திரு. அழ. வள்ளியப்பாவின் அழகிய கருத்து.
எனவே சிறுவர்கள் சிறந்த முறையில் வளர திருமதி. ஜெயந்தி நாகராஜன் அவர்கள் அரும்பணி ஆற்றி வருகிறார் என்பதில் ஐயமில்லை. புகழ்பெற்ற அறிஞர்கள், தலைவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரின் வரலாறுகளைக் குழந்தைகள் படித்து அவர்களைப்போல் சிறப்புற்று நாட்டிற்கு அரும்பணி ஆற்ற வேண்டும் என்ற அவா உடையவர்.
குழந்தைகளுக்காக எழுதிய பாடல்களே ஆயினும் அவை கூறும் கருத்துக்கள் மிகச் சிறந்தவை நிலவு, மயில், பட்டம், மாடித்தோட்டம் எனப் பற்பல பாடு பொருள்களை அவர் திறம்பட கையாண்டுள்ளார். இளவயதில் குறள் வழியில் நடந்திட வேண்டும் என்பதைக் குறள் வழி எனும் பாடல் வழி அருமையாக விளக்குகிறார்.
வேளாண்மைத் தொழிலின் மேன்மையைச் சிறுவர்கள் உணரும் விதமாக வீட்டுத்தோட்டம் அமைத்திட வேண்டுமெனக் கூறுகிறார். சேர்ந்து வாழும் தன்மையினைச் சிறுவர் சிறுமியர்கள் உணர்ந்து கொள்ளும்படி ஒரு பாடல் அன்பும் பண்பும் அகத்தில் இருக்கு என்ன அழகான வரிகள்.
இப்படிக் கூறிக் கொண்டே போகலாம். இவர் எழுதிய ஒவ்வொரு பாடலும் அட்சர லட்சம் பெறும். குழந்தை இலக்கியத்திற்குப் புகழ் சேர்க்கும். இவரது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
Release date
Ebook: 20 July 2022
Lyric Poetry & Drama
முனைவர் திருமதி. ஜெயந்தி நாகராஜன் அவர்கள் சிறந்த எழுத்தாளர் கவிஞர் பேச்சாளர் அவர் எழுத்தை ஆளவில்லை.
எழுத்து அவரை ஆள்கிறது என்று கூறலாம். குழந்தைகளுக்காக அழகிய பாடல்கள் நாடகங்கள் வாழ்க்கை வரலாற்று நூல்கள் எனப் பலவற்றை அளித்துள்ளார் குழந்தைகளுக்காக எழுதும்பொழுது குழந்தையாகவே மாறிவிடுகிறார். குழந்தை உள்ளம் படைத்தவர் ஏடு தூக்கி பள்ளியில் இன்று பயிலும் சிறுவரே நாடு காக்கும் தலைவராய் நாளை விளங்கப் போகிறார் என்பது குழந்தைக் கவிஞர் திரு. அழ. வள்ளியப்பாவின் அழகிய கருத்து.
எனவே சிறுவர்கள் சிறந்த முறையில் வளர திருமதி. ஜெயந்தி நாகராஜன் அவர்கள் அரும்பணி ஆற்றி வருகிறார் என்பதில் ஐயமில்லை. புகழ்பெற்ற அறிஞர்கள், தலைவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரின் வரலாறுகளைக் குழந்தைகள் படித்து அவர்களைப்போல் சிறப்புற்று நாட்டிற்கு அரும்பணி ஆற்ற வேண்டும் என்ற அவா உடையவர்.
குழந்தைகளுக்காக எழுதிய பாடல்களே ஆயினும் அவை கூறும் கருத்துக்கள் மிகச் சிறந்தவை நிலவு, மயில், பட்டம், மாடித்தோட்டம் எனப் பற்பல பாடு பொருள்களை அவர் திறம்பட கையாண்டுள்ளார். இளவயதில் குறள் வழியில் நடந்திட வேண்டும் என்பதைக் குறள் வழி எனும் பாடல் வழி அருமையாக விளக்குகிறார்.
வேளாண்மைத் தொழிலின் மேன்மையைச் சிறுவர்கள் உணரும் விதமாக வீட்டுத்தோட்டம் அமைத்திட வேண்டுமெனக் கூறுகிறார். சேர்ந்து வாழும் தன்மையினைச் சிறுவர் சிறுமியர்கள் உணர்ந்து கொள்ளும்படி ஒரு பாடல் அன்பும் பண்பும் அகத்தில் இருக்கு என்ன அழகான வரிகள்.
இப்படிக் கூறிக் கொண்டே போகலாம். இவர் எழுதிய ஒவ்வொரு பாடலும் அட்சர லட்சம் பெறும். குழந்தை இலக்கியத்திற்குப் புகழ் சேர்க்கும். இவரது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
Release date
Ebook: 20 July 2022
Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
India