Religion & Spirituality
ஆடி... உள்ளதை உள்ளபடி காட்டும். ஆடியில் அவதரித்த ஆண்டாளும் தன் உள்ளத்துள் உறைந்த காதலை அப்படியே விண்டுரைத்தவள். பண்டைய நாளில் இப்படி ஒரு பெண் மனம் திறந்து பேசியது இன்றளவும் பேசு பொருளானது.
தன்னுடைய தோள்கள் மணிவண்ணனோடு மட்டுமே பொருந்தும் என்று உறுதியாக ஏன் இறுதியாகவும் உரைத்தவள். மாதங்களில் நான் மார்கழி என்ற மாதவனின் வாய்மொழிக்கேற்ப கவி மலரை அள்ளித் தந்த கவிதாயினி.
ஆழ்வார்கள் பன்னிருவருள் இக்கண்மணியே ஒரே பெண்மணி. பெரியாழ்வார் வசம் வந்த வேதாந்தி அவள். அவள் வந்த விவரம். நமக்குத் தந்த புதையல் இவற்றைத் தொடர்ந்து பார்ப்போமா?
முகுந்தாச்சார்யாருக்கும் பதுமையாருக்கும் மகனாக சுவாதி நட்சரத்தில் அவதரித்தவர் பெரியாழ்வார். இவர் கருடனின் அம்சமாகக் கருதப்படுகிறார்.
இவரது இயற் பெயர் ராம ஆண்டான் என்பதே. ஆனால் எப்போதும் தனது சிந்தையில் நாராயணனையே கொண்டிருந்த காரணத்தால் விஷ்ணுசித்தர் என்றே அழைக்கப்பட்டார். இனி கோதையின் கதை உங்கள் பார்வைக்கு.
Release date
Ebook: 7 July 2022
Religion & Spirituality
ஆடி... உள்ளதை உள்ளபடி காட்டும். ஆடியில் அவதரித்த ஆண்டாளும் தன் உள்ளத்துள் உறைந்த காதலை அப்படியே விண்டுரைத்தவள். பண்டைய நாளில் இப்படி ஒரு பெண் மனம் திறந்து பேசியது இன்றளவும் பேசு பொருளானது.
தன்னுடைய தோள்கள் மணிவண்ணனோடு மட்டுமே பொருந்தும் என்று உறுதியாக ஏன் இறுதியாகவும் உரைத்தவள். மாதங்களில் நான் மார்கழி என்ற மாதவனின் வாய்மொழிக்கேற்ப கவி மலரை அள்ளித் தந்த கவிதாயினி.
ஆழ்வார்கள் பன்னிருவருள் இக்கண்மணியே ஒரே பெண்மணி. பெரியாழ்வார் வசம் வந்த வேதாந்தி அவள். அவள் வந்த விவரம். நமக்குத் தந்த புதையல் இவற்றைத் தொடர்ந்து பார்ப்போமா?
முகுந்தாச்சார்யாருக்கும் பதுமையாருக்கும் மகனாக சுவாதி நட்சரத்தில் அவதரித்தவர் பெரியாழ்வார். இவர் கருடனின் அம்சமாகக் கருதப்படுகிறார்.
இவரது இயற் பெயர் ராம ஆண்டான் என்பதே. ஆனால் எப்போதும் தனது சிந்தையில் நாராயணனையே கொண்டிருந்த காரணத்தால் விஷ்ணுசித்தர் என்றே அழைக்கப்பட்டார். இனி கோதையின் கதை உங்கள் பார்வைக்கு.
Release date
Ebook: 7 July 2022
Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
India